செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கைக்குழந்தையை கொன்ற இங்கிலாந்து தம்பதிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கைக்குழந்தையை கொன்ற இங்கிலாந்து தம்பதிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை

0 minutes read

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் செல்வந்தரும் அவருடைய வாழ்க்கைத் துணையும் தங்கள் பெண் குழந்தையை அலட்சியப்படுத்தி மரணத்தை விளைவித்ததால் அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

செல்வந்தர் கோன்ஸ்டன்ஸ் மார்ட்டனும் அவருடைய கணவர் மார்க் கோர்டனும் 2022ஆம் ஆண்டில் யாருக்கும் தெரியாத இடத்தில் வாழ முற்பட்டனர்.

அப்போது கோன்ஸ்டன்ஸ் கர்ப்பமாக இருந்தார். பனிக்காலத்தில் இருவரும் அவர்களுடைய கைக்குழந்தையுடன் கூடாரத்தில் வாழ்ந்தனர்.

2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் இருவரும் விட்டுவிட்டுச் சென்ற கார் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததை பொலிஸார் கண்டனர்.

இதனையடுத்து அவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் தொடங்கியது. 2 மாதங்களாகத் தேடல் பணி நீடித்தது.

இந்நிலையில், பிரைட்டன் (Brighton) நகரில் இருவரும் பிடிபட்டனர். 2 நாள்களுக்குப் பின்னர் அவர்களுடைய குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பெண் குழந்தையை அலட்சியப்படுத்தி மரணத்தை விளைவித்ததால் அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.