நிலக்கரி தட்டுப்பாட்டினால் எதிர்காலத்தில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்பட மாட்டாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் சிலர் வெளியிட்டு வரும் இது போன்ற அறிக்கைகள் குறித்து பொதுமக்கள் எவ்வித தேவையில்லாத அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் ஆண்டில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 400 கிலோவொட் திறன் கொண்ட மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.