புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசிப் பொங்கலும் புலம்பெயர் தமிழனும் (படங்கள் இணைப்பு)வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசிப் பொங்கலும் புலம்பெயர் தமிழனும் (படங்கள் இணைப்பு)

வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசிப் பொங்கலும் புலம்பெயர் தமிழனும் (படங்கள் இணைப்பு)வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசிப் பொங்கலும் புலம்பெயர் தமிழனும் (படங்கள் இணைப்பு)

1 minutes read

வருடந்தோறும் நடைபெறும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வன்னிபிராந்திய மக்களின் வாழ்வோடு ஒன்றிய இவ்விழா பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் அப்பிரதேச மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வரிகள் இவை;

 

பாகுத்தெண்டலில் இருந்து பக்குவம் காத்து….

அன்றிலிருந்து அம்மாளாச்சி கோயிலுக்கு

நண்பர்களுடன் நூல் முடிய போய்..

சிலாவத்தை குணத்தார் முன்னால நடக்க

தீர்தக்குடத்துடன் வாய்கட்டிய தங்கராசா அண்ணையின்

அந்த நடைக்கு ஈடு கொடுத்து நடந்து

தீர்த்தக்கரைக்கு நண்பர்களுடன் நடையாய் சென்று ..

பெற்றோல்மக்ஸ் வெளிச்சத்தில ஊருக்கு

தீர்த்தம் நிறைஞ்ச குடத்தோட திரும்பி வந்து ..

காட்டா விநாயகர் பொங்கல் முடிய

மண்டப்பண்டத்தோட புதறிகுடாவால நடந்து

அம்மளாச்சிட்ட போய் விடியக்காலம பூசை பாத்து .

அதுக்கு பிறகு கோயிலில தொண்டர்களாய் நண்பர்களுடன்..

நின்று அன்னதானத்து சாப்பாடும் கலையரங்கத்தில காலாறலும் ..

விடியவிடிய எங்களயே மறந்து கோயில்ல நிண்டு

வளந்து நேரல், கச்சு நேரல்..பாதை வெட்டல்.

இப்பிடி நடக்கிற எல்லாம் பார்த்து ..

விடியக்கிடைக்கிற வளந்து புக்கையோட

வீட்ட வருவதோட முடிந்து போகும்

ஒரு கிராமத்து வாழ்க்கையினதும் ..

கிராமிய வழிபாட்டினதும் ..சுகம்

வேறு எங்குமே கிடைத்திடாது ..

வெளிநாடு கனமாய் தெரிகின்ற காலங்களில் – இந்த

வற்றாப்பளை பருவகாலமும் ஒன்று.

–  சோதிநாதன் பரணிதரன்

 

படங்கள் – கந்தசாமி திலீபன்

wrwer rqerew RETERT SGEG SGFG WERTWRE SDGD SDFGDG RTR RGREGRE REGSRE TGHSTH tgwergwe wergetg5t w5t35 4rq456 13064735_1796896610540507_8242446923894226997_o

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More