இலங்கை இந்தியா சூனிய பிரதேசமாக இருக்கும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் குறிகட்டுவான் துறைமுகத்தில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர்.
குறித்த இறங்கு துறைக்கு சென்ற நிலையில் அங்கு போதிய படகுகள் காணப்படவில்லை. இதனால் மிக நீண்ட நேரம் அங்கு மக்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் கடற்படையினர் காங்கேசன்துறைக்கு அழைத்து சென்றுள்ளனர். காங்கேசன்துறையில் இருந்து கடற்படையின் கப்பலில் இம் மக்களை கச்சதீவுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்..