Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சேரன் கதையில் விஜய் சேதுபதி.

சேரன் கதையில் விஜய் சேதுபதி.

1 minutes read

பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக திருமணம் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு புதிய படத்தை இயக்குவதற்கான கதையை தயார் செய்துள்ளார். இந்த கதையை முன்னணி நடிகர்களிடம் சொல்ல நேரம் கேட்டும் அவர்கள் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேரன் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி முன்வந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் இதன் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. தற்போது தவமாய் தவமிருந்து படத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு பாராட்டியவருக்கு சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ள சேரன், “தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய் சேதுபதியோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை.

ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும், தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழிவிடுமா காலம்” என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இது தவமாய் தவமிருந்து படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More