நீண்டகாலமாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்படப் பெருநூலின் வெளியீட்டு நிகழ்வின் பதிவுகள் வெளியாகியுள்ளன.
ஒளிப்பட நூல் வெளியீட்டு நிகழ்வின் உரை 02.
பின்வரும் வீடியோ இணைப்பில், எழுத்தாளரும் சமூக அரசியல் செயற்பாட்டாளருமான சேனன் அவர்களது உரையினைப் பார்வையிடலாம். ஏனைய உரைகள் தனித்தனியாகப் பதிவுசெய்யப்படும்.
// உலகை உலுக்கிய வியட்நாம் சிறுமியின் ஒளிப்படத்திற்கு நிகராக உள்ளது, இந்த நூலில் காணப்படும் தந்தையின் இரத்தக்கறை படிந்த முகத்துடன் காணப்படும் சிறுமியின் ஒளிப்படம். // – சேனன்