Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜோதிகாவின் 50வது படம் | மணல் சிற்ப வடிவில் வாழ்த்து

ஜோதிகாவின் 50வது படம் | மணல் சிற்ப வடிவில் வாழ்த்து

1 minutes read

சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தோன்றிய அவர், சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தன்னுடன் பல படங்களில் நடித்த முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மணல் சிற்பம்

இந்நிலையில் ஜோதிகாவின் 50வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதையொட்டி மெரீனா கடற்கரையில் ஜோதிகாவின் மணல் சிற்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜோதிகாவின் புகைப்படத்துடன் ‘உடன்பிறப்பே’ படத்தின் வெளியிட்டு தகவல் இடம்பெற்றுள்ளது. அதோடு வாழ்த்துக்கள் ‘ஜோதிகா 50’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More