Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மீண்டும் பனையூரில் ரசிகர்களை சந்தித்த விஜய்

மீண்டும் பனையூரில் ரசிகர்களை சந்தித்த விஜய்

1 minutes read

விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் நிலையில் தற்போது பெரிய அளவில் அப்படக்குழு பிரமோசன்களை முடுக்கி விட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் விஜய். அப்போது அவர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக மீண்டும் பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பில் வாரிசு படத்தை வெளிமாவட்டங்களில் மக்களிடம் கொண்டு சேர்க்க என்னென்ன விளம்பர யுக்திகளை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்புக்கு பின் வழக்கம்போல் பிரியாணி விருந்தும் தடபுடலாக நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இப்படி அடுத்தடுத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக அடையாள அட்டையுள்ள விஜய் ரசிகர் மன்றத்தினரே இந்த சந்திப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More