செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு பாலஸ்தீன் தடையை எதிர்த்து இலண்டனில் மாபெரும் பேரணி; 425க்கும் மேற்பட்டோர் கைது!

பாலஸ்தீன் தடையை எதிர்த்து இலண்டனில் மாபெரும் பேரணி; 425க்கும் மேற்பட்டோர் கைது!

1 minutes read

பாலஸ்தீன் நடவடிக்கை பிரச்சாரக் குழு மீதான அரசாங்கத்தின் தடையை எதிர்த்து, இலண்டனில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் 425க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர், குழு மீதான தடைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் “நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன், நான் பாலஸ்தீன் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கிறேன்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

பாலஸ்தீன் நடவடிக்கை குழுவை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ், கடந்த ஜூலையில் இங்கிலாந்து அரசாங்கம் தடை செய்தது.

இக்குழுவில் உறுப்பினராக இருப்பதோ அல்லது ஆதரவளிப்பதோ 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றவியல் ஆகும்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவளித்ததற்காகவே கைது செய்யப்பட்டதாக பெருநகர பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், 25க்கும் மேற்பட்டோர் பொலிஸார் மீதான தாக்குதல்கள் மற்றும் பிற பொது ஒழுங்கு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பேரணியின் போது அதிகாரிகள், “அசாதாரண அளவிலான துஷ்பிரயோகத்திற்கு” உள்ளானதாக பெருநகர பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் வாய்மொழி துஷ்பிரயோகத்துடன், குத்துக்கள், உதைத்தல், துப்புதல் மற்றும் பொருட்கள் வீசுதல்” ஆகியவை அடங்கும். அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுக்கும் “ஓர் ஒருங்கிணைந்த முயற்சி” இருந்ததாகவும், ஓர் அதிகாரியைத் தாக்கிய எவரும் சட்டத்தின் படி வழக்குத் தொடரப்படுவார்கள் என்றும் பொலிஸார் எச்சரித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த Defend Our Juries அமைப்பு, இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தது.

அட்டைப் பலகைகளை ஏந்திய ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்ய முயற்சித்த அதிகாரிகள் “வயதானவர்கள் உட்பட அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை கடுமையாகத் தாக்கியதாக” அவர்கள் குறிப்பிட்டனர்.

பொலிஸ் அதிகாரி ஒருவர், ஒரு வயதான ஆர்ப்பாட்டக்காரரை தரையில் தள்ளிய வீடியோவையும் அவர்கள் வெளியிட்டனர்.

Defend Our Juries இன் செய்தித் தொடர்பாளர் முன்னதாக, “இந்த அபத்தமான தடைக்கு எதிரான எதிர்ப்பு அதிவேகமாக வளர்ந்து வருகிறது” என்று கூறியிருந்தார்.

பாலஸ்தீன் நடவடிக்கை மீதான தடை “செயல்படுத்த முடியாதது மற்றும் வளங்களின் அபத்தமான வீணடிப்பு” என்பதை ஆர்ப்பாட்டம் காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பாலஸ்தீன் தடையை எதிர்த்து இலண்டனில் மாபெரும் பேரணி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.