செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் இலண்டனில் திறப்பு – அங்கீகாரப் பயணத்தில் புதிய மைல்கல்

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் இலண்டனில் திறப்பு – அங்கீகாரப் பயணத்தில் புதிய மைல்கல்

0 minutes read

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் இலண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து பலஸ்தீனத்தை தனிநாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த தீர்மானத்தின் தொடர்ச்சியான, முக்கியமான அடுத்த கட்டமாகக் கருதப்படுகிறது.

தூதரகத் திறப்பு விழாவில் உரையாற்றிய பலஸ்தீனத் தூதுவர் ஹூசாம் சோம்லோட், இந்த நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் கொண்டது எனக் குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகளாக தங்களின் தன்னாட்சி உரிமைக்காக போராடி வரும் பலஸ்தீன மக்களுக்கு இது ஒரு மரியாதையான சர்வதேச அங்கீகாரம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், காசா, கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பலஸ்தீனியர்களின் அடையாளத்தையும் உரிமையையும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்கான தெளிவான சான்றாக இந்த தூதரகம் விளங்குகிறது என்றும் ஹூசாம் சோம்லோட் வலியுறுத்தினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.