செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு வட அயர்லாந்தில் இரண்டாம் நாளாகத் தொடரும் வன்முறை: 12 பொலிஸார் காயம்; 16 பேர் கைது!

வட அயர்லாந்தில் இரண்டாம் நாளாகத் தொடரும் வன்முறை: 12 பொலிஸார் காயம்; 16 பேர் கைது!

1 minutes read

பெல்ஃபாஸ்டில் கடந்த திங்கட்கிழமை நடந்த ஒரு கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, வட அயர்லாந்தில் இரண்டாவது நாளாகக் கடுமையான வன்முறை மற்றும் சமூக மோதல்கள் வெடித்துள்ளன.

கோ ஆன்ட்ரிம் (Co Antrim) பகுதியில் திரண்டிருந்த கும்பலைக் கலைக்க பொலிஸார் நீர் பீய்ச்சும் கருவிகளைப் பயன்படுத்தினர். இந்த மோதலில் 12 பொலிஸார் காயமடைந்தனர். மேலும், வன்முறை தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்களன்று ஸ்டீபன் ஓகில்வி (Stephen Ogilvie) என்பவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலே இந்த பதற்றத்திற்குக் காரணமாகும்.

இச்சம்பவத்தில் சூடானைச் சேர்ந்த 30 வயதான ஹாதி அலோடிட் (Hadi Alodid) என்பவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி: கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து பரவிய வன்முறை: வீடுகள், கார்கள் மற்றும் பஸ் தீ வைப்பு!

சிறுபான்மையின மக்கள் மற்றும் வெளிநாட்டினரின் வீடுகள் குறிவைக்கப்படுவதால் அவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். வடக்கு பெல்ஃபாஸ்டில் ஒரு செவிலியர், முகமூடி அணிந்த நான்கு நபர்களால் மருத்துவமனைக்குள் துரத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறையைத் தூண்டுவதற்குச் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். வீடுகளின் முகவரிகளை ஆன்லைனில் பகிர்ந்து தாக்குதலுக்குத் திட்டமிடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பொலிஸ் தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்பி மக்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்று வடக்கு அயர்லாந்து பொலிஸ் தலைவர் ஜான் பௌட்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கார்கள், வீடுகள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளனர்.

“இது போன்ற வன்முறைச் செயல்களுக்கு எந்த நியாயமும் இல்லை” என்று வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் மற்றும் துணை முதல்வர் எம்மா லிட்டில்-பெங்கெல்லி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமைதி காக்குமாறு கத்திக்குத்தில் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஓகில்வியின் குடும்பத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி: அமைதி காக்குமாறு கத்திக்குத்தால் பாதிக்கப்பட்டவர் குடும்பம் வேண்டுகோள்! 

வட அயர்லாந்தில் இரண்டாம் நாளாகத் தொடரும் வன்முறை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.