தேவையான பொருட்கள்
எலுமிச்சை – 1
சர்க்கரை பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பௌலில் எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் சர்க்கரை பவுடர், கற்றாழை ஜெல், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு பிரஷ் பயன்படுத்தி முகத்தில் தடவி 30-40 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கைப் பயன்படுத்திய பின், உடனே வெயிலில் செல்லக்கூடாது. ஒருவேளை செல்ல வேண்டிய கட்டாயம் வந்தால், சன் ஸ்க்ரீன் எதையேனும் பயன்படுத்தி பின் செல்லுங்கள்.
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-4 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் 10 நாட்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
குறிப்பு
சரும நிறம் இன்னும் அதிகரிக்க வேண்டுமென்று அடிக்கடி இதைப் போட வேண்டாம்.
இதில் பேக்கிங் சோடா இருப்பதால், தொடர்ச்சியாக பயன்படுத்தினால் சருமம் மோசமாக பாதிக்கப்படும்.