Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் ஒரே வாரத்தில் அப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா

ஒரே வாரத்தில் அப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா

1 minutes read

பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும்.மென்மையான அப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிப்பது உண்டு, அப்படி அப்பிள் போன்ற கன்னங்களை பெறுவதற்கு இதோ டிப்ஸ்,

அப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் பேஷியல் ஸ்ட்ரோக் கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெறலாம்.
மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.

தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும்.தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப்பையும் சாப்பிட வேண்டும்.தோலில் எண்ணெய் பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச் சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதை போட்டு கன்னம் தங்கம் போல் மின்னும்.

ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு கழுவவும்.தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தை பளபளப்பாக்கும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணையுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வர, ஒட்டிய கன்னங்கள் பெரிதாக ஆரம்பிக்கும்.

நன்றி | வவுனியா நெற்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More