செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கருகிய காகிதங்கள் | கேசுதன்

கருகிய காகிதங்கள் | கேசுதன்

0 minutes read

 

தீச்சுடர் விட்டெரிய வான்வெளி முகர்ந்த
வெண்தாமரை கண்டாய்
தேகம் நிரம்பிய மகரந்த மணிகளை
கொண்டாய்
விழிநூல் புனைந்து மனவெளி நிரப்பி
ஆசானுமாய்

நிழல் பூத்த கொடிதனில் பல்
மொட்டுக்களை விருந்தளித்தாய்
ஆயிரமாயிரம் துளிகளை விதைத்து
விலையில்லா வனப்பு ஈந்தாய்
என்னுயிர் தளிரே

அன்னங்களாய் பலர்கூடி
ஒடுங்கிய பலர் நெஞ்சம் மறைத்து
இருள்மூடிய கதவுடைத்து
அறிவொளி இறைத்த
ஆசானும் ஆனாய்

காலன் செய்த வேலை
என்னவோ உன்
புகழ் மயக்க முனைந்தானோ
கள்வன் உன் இனமழிக்க
புறப்பட்டது அறிந்ததுவோ

வன்கும்பல் காமினி கரம்
முறித்தெறிய பயந்தாயா
பசுஞ்சோலை இதழ் விரித்து-உன்
மகரந்த மணிகளை பிய்த்தவன்
தலை கொய்யாமல் விட்டது
காரணம் என்னவோ

அங்கே அடுக்கிய இதழ்களை
கொய்தவன் வீணாய் போக
விரைந்திடுவாயா

மகரந்த மணிகளோடு – உன்
மென்னிதழ் கருகிட
தீயிட்டவன் வர்க்கம்
அழிந்திட பழிப்புரையிட்டு
தாகம் தீர்ப்பாயாக.

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More