செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சக மனிதனுக்காக துக்கிப்பவன் | வசந்ததீபன்

சக மனிதனுக்காக துக்கிப்பவன் | வசந்ததீபன்

0 minutes read

பட்டாம்பூச்சிகளின் வர்ணங்களில்
லயித்துக் கிடப்பவனல்ல
நட்சத்திரங்களின் ஒளியைத்
தேடித் திரிபவனல்ல
இலைகள் உதிர்வதற்காக
கண்ணீர் சிந்துபவனல்ல
பூக்களின் மலர்தலுக்காக தவம்
கிடப்பவனல்ல
வெடிமருந்து வாசனையை
நுகர்ந்து களிப்பவனல்ல
குழந்தைகளின் அழுகையை
சங்கீதமென்று ரசிப்பவனல்ல
பெண்களின் சதையை
திருட்டுப் பூனையாய் தின்பவனல்ல
புத்தகங்களில் இருளை
நிரப்புவனல்ல
நுகத்தடிகளை ஆபரணங்களென
எவர் மீதும் பூட்ட நினையாதவன்
சாதி நஞ்சை எவருக்கு புகட்டாதவன்
மதவெறியை இருதயத்திலும் மூளையிலும் சுமக்காதவன்
தாய்மொழியை நேசிப்பான் மற்ற மொழிகளைத் தூஷிப்பவனல்ல
தன் இனம் செழிப்பதற்காக
அயல் இனத்தை உரமாக்குபவனல்ல
கடவுள் கற்பனையை சமூகத்தின் குருதியில் கலக்கமாட்டான்
இயற்கையின் உயிரான நீர் நிலம் காற்றில் சுயநலத்தின் பேராசையை நிரப்பமாட்டான்
மனிதனை மனிதனாக வாழ
திரள் சமூகத்தோடு கரங்கள் கோர்த்து
மனிதத்தை எதிர்கால சந்ததிக்காக
விதைத்தே
வாழ்வை எழிலார்ந்த பூவனமாக்க
தன்னையே பலியிட தயங்காதவன்.

🔘

வசந்ததீபன்

 

படம் – LOKO

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.