Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அகலிகையின் செருப்பு | துவாரகன்

அகலிகையின் செருப்பு | துவாரகன்

1 minutes read

மற்றவர் பொருளைத் திருட
என் தந்தை
எனக்குக் கற்றுத் தரவில்லை.
நானும் என் மகனுக்கு
கற்றுக் கொடுக்கப் போவதில்லை.

நிரம்பக் கற்றவர்களும்
மற்றவர் பொருளைத்
திருடக் கற்றிருக்கிறார்கள்.
செருப்பைக்கூட…
களவாக
அணிந்துபார்க்க
ஆசைப்படுகிறார்கள்.

இந்திரன் சேவலாகியதும்
திருட்டுக்காகத்தான்.
பூனையாகிப்
பொட்டுக்குள்ளால்
தப்பியோடியதும்
திருடியதால்த்தான்.

ஏன், அகலிகைக்கு மட்டும்
தான் அணிந்திருந்தது
தன் செருப்பில்லையென்று
தெரியாமலா போனது?

திருடியவரும்
திருடக் கொடுத்தவரும்
பிரதியுபகாரமாக
ஒன்றை இன்னொன்றால்
நிரப்பிக் கொள்கிறார்கள்போலும்!

துவாரகன்
12012022

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More