0
இலண்டனில் இயங்கும் ஆவர்த்தனா கலைக்கூடத்தின் 2014 ம் ஆண்டுக்கான “கலைக்கரங்கள்” போட்டிக்கான தேர்வு நாளை 18ம் திகதி நடைபெறுகின்றது. பல வருடங்களாக லண்டனில் நடாத்தப்படுகின்ற இப் போட்டிகளில் பெருமளவான மாணவர்கள் பங்குபற்றுவது வழக்கம்.
“கலைக்கரங்கள்” இறுதிப்போட்டி நவம்பர் 15ம் திகதி நடைபெற உள்ளது. புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக லண்டனில் இளம் சமுகத்தில் கலைகளையும் தமிழர் கலாச்சாரங்களையும் வளர்ப்பதில் ஆவர்த்தனா பெரும் பங்களிப்பினை வழங்கி வருகின்றது.