நேற்று மாலை மேற்கு லண்டனில் சிறப்புற நடைபெற்ற ORHAN SRILANKA நிறுவனத்தின் கிறிஸ்மஸ் நிகழ்வில் ஹரோ முதியோர் இல்லத்தில் இருந்து வழங்கப்பட்ட கிராமிய நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கலைகளுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை எடுத்துக்காட்டிய இந்நிகழ்வு தமிழரின் அடையாளம் ஆழமான அத்திவாரத்தில் இருப்பதை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
இதே நிகழ்வில் இன் நிறுவனத்தால் வவுனியாவில் நடாத்துகின்ற மனவளர்ச்சி குன்றிய சிறார்களின் பாடசாலை பற்றிய காணொளி காண்பிக்கப்பட்டது.
நாடகம் நடனம் பாடல் என பல்சுவை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
Kilipeople மற்றும் Lotus Caring Hands இனால் கிளிநொச்சி பொது நூலகத்துக்கு 25,000 நூல்கள் சேகரிக்கப்படும் திட்டத்துக்கான முன்னெடுப்புக்களும் இடம்பெற்றதுடன் சுமார் 150 நூல்களும் இன் நிகழ்வில் சேகரிக்கப்பட்டுள்ளது.