எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இலண்டனில் தமிழர் வர்த்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. புலம்பெயர் தேசத்தில் தமிழர் தமது பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தடங்களைப் பதித்து வரும் இன்றைய காலத்தில் தமிழ் சமூகத்தின் பொருளாதார கட்டுமானத்தின் பலத்தை சுட்டிக்காட்டுவதாக இக் கண்காட்சி அமையும்.
அனைத்துத் துறைகளில் இருந்தும் சுமார் 140 வர்த்தகர்கள் தமது வியாபார பொருட்கள் சேவைகளை காட்சிப்படுத்த உள்ளனர். மேலதிகமாக 100 க்கு மேற்பட்ட விளம்பரதாரர்களும் கலந்து கொள்கின்றனர்.
இலண்டன் தமிழர் சந்தை, மிக முக்கியமான ஒரு நிகழ்வாக நடைபெற உள்ளதாக ஏற்பாட்டுக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.