6
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக வெளிவந்த செய்தி மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இச் செய்தி பல இணைய ஊடகங்களில் வந்திருந்தாலும் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இருந்து திரிவுபடுத்திய செய்தியாகவே வெளிவந்துள்ளது.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தெரிவித்த கருத்தே மிகைப்படுத்தி மேற்படி செய்தியாக வெளிவந்துள்ளது.