0
யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தை அரசாங்கம் இதுவரை அபாய வலயமாக அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பிரதானி மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
வடமாகாணம் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகி இருந்தன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் ஊடகப் பிரதானி அப்படியொரு முடிவை அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.