Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையில் ஒரே நாளில் 38பேருக்கு கொரோனா; அதிகரிக்கும் எண்ணிக்கை

இலங்கையில் ஒரே நாளில் 38பேருக்கு கொரோனா; அதிகரிக்கும் எண்ணிக்கை

1 minutes read

அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 இலிருந்து 373 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு  அறிவித்துள்ளது.

இம்மாதம் 20ஆம் திகதி ஒரே நாளில் 33 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அதன்பின்னர் ஒரே நாளில் அதிக தொற்றாளர்களாக 38 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான 7 நாட்களுக்குள் 130 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் 68 பேர் கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்களாவர்.

தொற்றுக்குள்ளாக்கியவர்களில் மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரை 107 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய 254 பேரும் 5 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 173 பேர் 29 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More