Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆயிரத்தை நெருங்கும் கொரோனா; 992 ஆக அதிகரித்தது

ஆயிரத்தை நெருங்கும் கொரோனா; 992 ஆக அதிகரித்தது

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 21 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 424 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மேலும் 149 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More