May 31, 2023 4:47 pm

நேற்று மாத்திரம் 41 பேர் புதிய கொரோனா நோயாளிகள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாத்திரம் கடற்படையினர் உட்பட்ட 36 பேர் இந்த தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து கடற்படையினரில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாத்திரம் 41 பேர் புதிய தொற்றாளிகளாக இனங்காணப்பட்டிருந்தனர்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 1182ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்