Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நயினாதீவு நாகபூஷனி அம்மனை அவமதித்த படைகளை விசாரிக்க மகிந்த உத்தரவு!

நயினாதீவு நாகபூஷனி அம்மனை அவமதித்த படைகளை விசாரிக்க மகிந்த உத்தரவு!

1 minutes read

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க   நயினாதீவு நாகபூஷனி அம்மன்  ஆலய உற்சவத்தின்போது,  பாதுகாப்பு பணிகளில் இருந்த  படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை  தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, வட.பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபரை இன்று (திங்கட்கிழமை) காலை தொடர்புகொண்ட பிரதமர், உடனடி விசாரணையை வலியுறுத்தியுள்ளார்.

மேலும்  இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும்  பொலிஸ்மா அதிபரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த அறிவிப்பை தொடர்ந்து,  நயினாதீவுப் பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சம்பந்தப்பட்ட படையினரை அழைத்து, விசாரணை நடத்தியிருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  படையினர், தாம் வேண்டும் என்றே இவ்வாறு செய்யவில்லை எனவும் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது எனவும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More