20 நிமிடங்களில், கொரோனா தொற்றை உறுதி செய்யும் பரிசோதனையை ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மெல்போர்ன் நகரில் உள்ள Monash பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் செயல்பாட்டை வைத்து கொரோனா தொற்றை உறுதி செய்யும் வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.
ஒரு துளி ரத்தத்தில், மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனை மூலம், தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது மட்டுமின்றி, இதற்கு முன் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபரா என்பதையும் கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.