Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பஸ் மீது மோதிய ரயில் – 7 பேர் பலி

பஸ் மீது மோதிய ரயில் – 7 பேர் பலி

1 minutes read

மெக்சிகோவின் குவெரேடாரோ மாகாணத்தில் பயணித்த பஸ்ஸில் அங்குள்ள தொழிற்சாலை பணியாளர்கள் பலர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எல் மார்க்ஸ்வெஸ் நகரில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே பஸ் சென்றது. அதேசமயம் அந்த தண்டவாளத்திலும் ரயில் வந்து கொண்டிருந்தது.

ஆனால் தண்டவாளம் அருகே சிக்னல், கேட் எதுவும் இல்லாததால் அந்த ரயில் வந்தது பஸ் சாரதிக்கு தெரியவில்லை.

எனவே தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது அந்த ரயில் வேகமாக மோதியது. இதில் அந்த பஸ் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு தரதரவென இழுத்து செல்லப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்து பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த கோர விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 17 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மெக்சிகோவில் உள்ள 7 ஆயிரம் ரயில் பாதைகளில் சுமார் 1,500 மட்டுமே சிக்னல்களை கொண்டுள்ளன. இதனால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More