இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் காசாவில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் 29 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பு தன்னுடைய சமூக வலைத்தள பதிவில் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் 50 சதவீதத்தினர் ஆசிரியர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம். எங்கள் வேதனைகளை ஒருவருக்கொருவர் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறோம்” என ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.