செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்தவில்லை | துரைராசா ரவிகரன்

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்தவில்லை | துரைராசா ரவிகரன்

1 minutes read

முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக தம்மால் கண்காணிக்கப்படுவதாகவும், அத்தகைய அத்துமீறல்களுக்கெதிரா தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (31)  கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே குறித்த விடயம் பேசப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்திய இழுவைப் படகுகள் கடற்கரையை அண்மித்த பகுதிகளுக்கு வருகைதந்து அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

எவ்வித தடையுமின்றி இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்கரையை அண்மித்து வருகைதந்து கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும்வரையில் கடற்படையினர் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

இவ்வாறு அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதார வளங்களை அழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுகின்றனர். இது எமக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைகின்றது.

அத்து மீறி எமது கடற்பரப்புகளுக்குள் உள்நுழையும் இந்திய இழுவைப் படகுகளை கடற்படையினருக்குத் தெரிவதில்லையா?

அல்லது அத்து மீறி எல்லைதாண்டி எமது நாட்டுக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக உள்நுழைபவர்களைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற கடற்படையினரிடமுள்ள கருவிகள் பழுதடைந்துள்ளனவா?

அவ்வாறு கடற்படையினரிடமுள்ள கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்திருந்தால் அதனை வெளிப்படுத்துங்கள். நாம் ஜனாதிபதியுடன்பேசி புதிய கண்காணிப்பு கருவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடுக்கை மேற்கொள்வோமென நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதன்போது கடற்படை அதிகாரி பதிலளிக்கையில்,

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக 24மணித்தியாலங்களும் கடற்படையினர் கண்காணிப்புக்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அவ்வாறு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழுவைப்படகுகளை கடற்படையினர் ரேடார் கருவிகள்மூலம் கண்காணித்து அவர்களுக்கெதிராக உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் கடற்படை அதிகரியினால் இதன்போது பதிலளிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.