செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமனம்

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமனம்

1 minutes read

தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கிறிஸ்டனை இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும்.

முன்னதாக அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணி (2008–2011) மற்றும் தென்னாப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணி (2011–2013) ஆகிய அணிகளின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அவரது பயிற்சியில் இந்தியா ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2011 பட்டத்தை வென்றதுடன், தென்னாபிரிக்கா 2013ஆம் ஆண்டு அனைத்து வடிவங்களிலும் உலக தரவரிசையில் முதல் இடத்தைப் பெற்றது.

1993 முதல் 2004 வரை நீண்ட அவரது விளையாட்டு வாழ்க்கையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14,087 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.

இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பின் கீழ், 2027ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடைபெறவுள்ளஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2027 போட்டிக்கான இலங்கை அணியின் தயாரிப்பை வழிநடத்துவது அவரது முக்கியப் பொறுப்பாக இருக்கும்.

இந்த நியமனம், தேசிய உயர் செயல்திறன் மையத்தின் அமைப்பை புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.