ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்தபோது |
பொதுபல சேனாவின் முக்கிய பிரச்சார ஆயுதமாக கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முகநூலே இருந்துவந்திருக்கிறது. இடையில் அவ்வியக்கத்தின் முகநூல் பக்கம் பல தடவைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும் புதுப்புது பெயர்களில் மீண்டும் மீண்டும் முகநூல் கணக்கை ஆரம்பித்து இயங்கி வந்தார்கள். முகநூலை அவர்கள் இலக்கத் தயாரில்லை. தொடர்ந்தும் தமது இனவாத வேலைத்திட்டத்திற்கு முகநூல் அவசியம். இப்போது முகநூல் மேற்கொண்டுள்ள முடக்கத்தை எதிர்கொள்ள இப்படியொரு உபாயத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அது மட்டுமன்றி ஞானசாரரின் படத்தைக் கூட பதிவுசெய்யப்பட்ட சில நொடிகளில் காணாமல் ஆக்குவதற்கும், அதிகப்படியானவர்களிடம் சேராத வகையிலும் முகநூலின் “படிமுறைத் தீர்வு” (Algorithm) என்கிற தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.