ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி இறக்குமதிகளுக்கு முற்றுமுழுதாக தடை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
விளாடிமிர் புட்டினின் தலைமைத்துவத்துக்கு பலம்வாய்ந்த அடியொன்றை அமெரிக்க மக்கள் வழங்கவுள்ளதையே இந்த நகர்வு எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் போருக்கு மானியம் வழங்குவதில் தாமும் ஒரு பங்குதாரராக இருக்கப் போவதில்லை என ஜோ பைடன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எரிவாயுவிற்கான விலைகள் அதிகரிக்குமென்கின்ற அச்சம் நிலவுகின்ற போதிலும், ஜனாதிபதி பைடனின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவில் பூரண ஆதரவு உள்ளமை விசேட அம்சமாகும்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறான அறிவிப்பை வௌியிடவுள்ளார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே உலக சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரித்திருந்தன.
பிரென்ட் மசகெண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 5 வீதத்தால் அதிகரித்து 130 டொலராக விற்பனையாகின்றது.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் அதிகம் தங்கியிருக்கும் ஐரோப்பாவை விட அமெரிக்காவின் இந்த நடவடிக்கை விரைவானது என சுட்டிக்காட்டப்படுகின்றது.