புதிய ஜனாதிபதி தலைமைத்துவ சபை ஒன்றை அமைத்திருக்கும் யெமன் ஜனாதிபதி அப்த் ரப்பு மன்சூர் ஹதி, தனது அதிகாரங்களையும் அந்த சபைக்கு வழங்கியுள்ளார்.
ஆட்சிமாற்ற செயற்பாட்டை பூர்த்தி செய்வதற்கு இந்த சபை அமைக்கப்பட்டிருப்பதாகவும் பல ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுடனான பேச்சுவார்த்தைக்கு இந்த சபைக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அடுத்து போரால் பாதிக்கப்பட்ட யெமன் பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டொலர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சவூதி அரேபியா அறிவித்தது.