இங்கிலாந்தில் கடந்த 45 ஆண்களில் என்றும் இல்லாத அளவுக்கு தற்போது மரக்கறிகளின் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இங்கிலாந்தில் வாழ்வோரின் வாழ்க்கைச் செலவு எதிர்பார்த்ததை விட கடந்த மாதம் அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் 10.1% ஆக இருந்த பணவீக்கம், பெப்ரவரி மாதம் 10.4% ஆக உயர்ந்தது.
அத்துடன், உணவகங்களில் உணவுகள் மற்றும் மதுபானங்கள் விலையேற்றம் கண்டதுடன், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் விலையும் கடந்த மாதம் அதிகரித்தது.
இங்கிலாந்து மக்களின் உணவுச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது, பெப்ரவரி மாத பணவீக்கத்துக்கு ஒரு பெரிய காரணியாக இருந்ததாகவும், பல்பொருள் அங்காடிகளில் சாலட் பொருட்கள் மற்றும் காய்கறிகளுக்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தின் மத்திய வங்கியான பாங்க் ஆஃப் இங்கிலாந்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தொடர்கின்றது.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்தில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு