அண்டார்டிக்கா கண்டத்தில் ஏற்பட்டுள்ளமாற்றத்தினால் பெரும் அச்சத்திலும் , ஆச்சரியத்திலும் குழப்ப நிலையை அடைந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
உலகின் 7 கண்டங்களில் 5 பெரிய கண்டங்களில் ஒன்றாக உள்ள இந்த அண்டார்டிக்கா கண்டமானது இந்தியா , பாகிஸ்தான்,சீனா ,பங்களாதேஷ் போன்ற நாடுகளை ஒன்றாக சேர்த்தால் கூட அதனிலும் பார்க்க பெரிய கண்டமாக திகழ்கிறது.
இது மனிதன் வாழ ஏற்ற சூழலாக காணப்படாத போதிலும் இங்கே கோடை காலத்தில் அங்கு சென்று சீசனால் ஸ்டேஷன் அமைத்து அங்கு ஆராச்சிகளை செய்து வருகின்றனர் விஞ்ஞானிகள். இங்கிருக்கும் சுற்று சூழல் யாராலும் கணிக்க முடியாத சுற்று சூழல் ஆகும்.
இவை இப்படி இருக்க இங்கே திடீர் என்று அதிக படியான பனி மலைகள் உருக அரமித்துள்ளது அண்டார்க்டிக் கண்டத்தில் பனி உருகுவது கடல் மட்டத்தை உயர்த்துவது மட்டுமின்றி ஆழ்கடல் நீரின் சுழற்சி வேகத்தைக் குறைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு நடத்திய நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆழ்கடல் நீரின் சுழற்சி கடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வளிமண்டலத்தில் இருந்து உறிஞ்சப்படும் கார்பனை வரிசைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், அண்டார்க்டிக்கில் வேகமாக பனி உருகுவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சரியாகச் சென்று கொண்டிருந்த ஆழ்கடல் நீரின் சுழற்சி தற்போது தலைகீழாக மாறி விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.