Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சூடானில் இராணுவ மோதல்; பலி எண்ணிக்கை 97ஆக உயர்வு

சூடானில் இராணுவ மோதல்; பலி எண்ணிக்கை 97ஆக உயர்வு

1 minutes read

சூடானில் இராணுவத்துக்கு இடையேயான மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளது.

ஐ.நா பணியாளர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை இராணுவ படைகளை, இராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை இராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் இராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. ஆர்.எஸ்.எப். துணை இராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பலியான பொதுமக்களில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் நிதானமாக செயல்பட வேண்டும் எனவும், வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்குமாறும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த இராணுவ மோதல்களுக்கு அமெரிக்கா, சீனா, ரஷ்யா, எகிப்து, சவுதி அரேபியா, ஐ.நா. அமைப்புகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி : சூடானில் இராணுவ மோதல்; 56 பேர் பலி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More