போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்காவில் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் அந்நாட்டு கடலோர காவல்படை சுற்றி வளைத்து பிடித்தது.
உலகின் அதிக போதை பொருள் கடத்தப்படும் நாடாக காணப்படும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடலோர காவல்படை படகில் சென்ற வீரர்கள் நடுக்கடலில் நீர்மூழ்கிக் கப்பலின் அருகே சென்றதும் அதன் மீது ஏறி, கடத்தல்காரர்களை கைது செய்தனர்.
நீர்மூழ்கி கப்பலில் இருந்து 232 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.