பிரான்ஸ் – பாரீஸ் நகரில் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் விதிமீறி செயல்பட்டார் என்பதற்காக நீல் என்ற 17 வயது சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பற்றித் தெரிந்த மக்கள், பிரான்ஸ் முழுவதும் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்றிரவு பாரீசின் எண்ணற்ற புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்முறையில் 170 பொலிஸார் காயமடைந்துள்ளனர். 40 கார்கள் தீக்கிரையாகியுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 40 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், அமைச்சர்கள் மட்டத்திலான நெருக்கடி பிரிவினர் கலந்துகொண்ட கூட்டத்தில் தலைமையேற்று, ஆலோசனை மேற்கொண்டார்.
அதில், வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. இதன்பின்னர் அவர், மக்கள் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.