மலேசியாவில் 6 மாநிலங்களில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கிளந்தான், திரெங்கானு, கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களிலேயே ஒரே நாளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அவற்றுக்கான வேட்புமனுத் தாக்கல், இம்மாதம் ஜூலை 29ஆம் திகதி நடைபெறும் என மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொலிஸார் மற்றும் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கான முன்னோடி வாக்களிப்பு, ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேற்படி 6 மாநிலங்களிலும் ஜூன் 22ஆம் திகதி முதல் ஜூன் 28ஆம் வரை தத்தம் சட்டமன்றங்களைக் கலைத்தன.