ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பு 10 மாத காலம் தாயின் கருவறையில் இருக்கும். அந்த 10 மாதங்களில் குழந்தையின் உடல் உறுப்புகள், செயல் திறன் ஆகியவை வளர்ச்சி அடையும். அவ்வாறு முழுமையாக வளர்ச்சி அடையாமல் பிறக்கும் குழந்தைகள் குறை மாத குழந்தைகள் என அழைக்கப்படும்.
அவர்கள் மற்ற குழந்தைகளை விட சற்று குறைவான வளர்ச்சி மற்றும் செயலி திறன் கொண்டிருப்பர். அவ்வாறு 22 இரண்டு வாரங்களில் பிறந்த பெண் குழந்தை ஒன்று தற்போது நலமுடன் உள்ளது. அந்த குழந்தை எந்த வித பிரச்சனையும் இன்றி மற்ற குழந்தைகளை போலவே இயல்பாக இருப்பதால் அதை அதிசய குழந்தை என்கிறார்கள் மருத்துவர்கள்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனையில் விஷம் குடித்ததாக கூறி ஒரு கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டார். அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பெப்ரவரி 22ஆம் திகதி காலை பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் எடை 12.4 அவுன்ஸ் அதாவது 350 கிராம் மட்டுமே. இதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எனினும், அந்தக் குழந்தை சிகிச்சையை முடித்து வைத்தியசாலையில் இருந்து வீடு கொண்டு செல்லப்பட்டுள்ளது.