Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 4 நாட்கள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு; அமைச்சரவை ஒப்புதல்!

4 நாட்கள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு; அமைச்சரவை ஒப்புதல்!

1 minutes read

இஸ்ரேல் – ஹமாஸ் இடையான போர் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடங்கி 40 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.

இதில் இஸ்ரேல் மக்கள் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் காஸா நகரில் உள்ள பலஸ்தீன மக்கள் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல – ஹமாஸ் இடையான போர் காரணமாக காஸா நகரில் வாழும் மக்கள் தான் அதிக உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை அடைந்துள்ளனர் என கூறி போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தினர்.

ஆனால், ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழியும் வரையில் போர் நிறுத்தம் இல்லை என் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளிப்படையாக அறிவித்தார்.

ஹமாஸ் தரப்பும் இஸ்ரேலை சேர்ந்த பணயக் கைதிகளை இன்னும் விடுவிக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், பணயக் கைதிகளை விடுவிக்க 4 நாட்கள் போர் நிறுத்தப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இது தொடர்பான வாக்கெடுப்பு, இஸ்ரேல் அமைச்சரவையில் நடைபெற்றது. அதில், இஸ்ரேல் அமைச்சரவையில் 4 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதாவது, ஹமாஸிடம் பணயக் கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கவே இந்தப் போர்நிறுத்தம் எனவும், இது போர் முற்றிலும் நிறுத்துவதற்கான அறிகுறி இல்லை எனவும், எங்கள் இலக்கான ‘ஹமாஸ் முற்றிலும் அழியும் வரை போர் தொடரும்” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

நாளை (வியாழன்) அல்லது நாளை மறுநாள் (வெள்ளி) முதல் ஒரு நாளைக்கு 10 பணயக் கைதிகள் வீதம் ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும், அதுவரையில் போர் நிறுத்தம் எனவும் இஸ்ரேல் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More