இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நிலை காரணமாக நத்தார் காலப்பகுதியில் உறுப்பு நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கக்கூடிய அபாயம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
காஸாவில் அதிகரிக்கும் பதற்றநிலையால் ஐரோப்பாவில் வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கக்கூடும் எனும் கவலை எழுந்துள்ளது.
இதனையடுத்து,பாதுகாப்பை வலுப்படுத்தக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை ஆணையர் கூறியுள்ளார்.
அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தாக்குதல் நடந்தது. அதில் ஜேர்மன் சுற்றுப்பயணி ஒருவர் உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்தி : பாரிஸ் ஐஃபல் கோபுரத்துக்கு அருகே கத்திக்குத்து; ஒருவர் மரணம்!