Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பாரிஸில் பயங்கர வெடி விபத்து; மூவர் உயிரிழப்பு

பாரிஸில் பயங்கர வெடி விபத்து; மூவர் உயிரிழப்பு

0 minutes read

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், லெவன்த் அரொன்சிண்ட்மெண்ட் பகுதியில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த வெடி விபத்தை தொடர்ந்து குடியிருப்பில் மளமளவென தீ பற்றியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் பலர் வசித்து வந்த நிலையில், குடியிருப்பின் 7ஆவது தளத்திலேயே வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த நகர பொலிஸார் மற்றும் தீயணைப்பு மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சமையல் எரிவாயு கசிவு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு தீ பற்றியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நகர பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More