G7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனடா பயணித்தார்.
கனடாவில் அவர் தரையிறங்கியபோது, அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது G7உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொள்கிறார்.
தொடர்புடைய செய்தி : G7 உச்சிமாநாட்டில் இருந்து ட்ரம்ப் பாதியிலேயே வெளியேறுகிறார்!
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இது அவரது ஆறாவது G7 உச்சி மாநாட்டுப் பங்கேற்பாகும்.
எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்து G7 மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றன.