தாய்லந்துப் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாட்டை, அந்நாட்டு நீதிமன்றத்தால் இன்று (01) முதல் தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தாய்லந்து செனட்டர்கள் முன்வைத்த வழக்கை நீதிமன்றம் இன்று விசாணைக்கு எடுத்துக்கொண்டு, மேற்படி உத்தரவிட்டது.
தாய்லந்தின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதியன்று கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடனான தொலைபேசி உரையாடல் அம்பலமானதிலிருந்து பேதொங்தார்ன் பலத்த எதிர்ப்பை எதிர்நோக்குகிறார்.
அவர் அந்த உரையாடலில் தமது இராணுவத் தளபதியைக் குறைகூறியிருந்தார். அதற்குத் பேதொங்தார்ன் பின்னர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.