கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
உணவுக்காக காத்திருந்தவர்கள் உட்பட 44 பேரை இஸ்ரேலியப் படைகள் கொன்றன. காசா நகரில் மட்டும் 33 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு காசாவில் கடுமையான தாக்குதல்களும் தொடர்கின்றன. ஷேக் ரத்வான் பகுதியில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இதேவேளை, காசாவில் ஆறு பாலஸ்தீனியர்கள் நேற்று ஒரே நாளில் பட்டினியால் மரணித்தனர்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய எல்லைக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையினர் இருந்த இடத்திற்கு அருகேயும் இஸ்ரேல் இராணுவம் டிரோன்கள் மூலம் 4 கையெறி குண்டுகளை வீசியுள்ளது.
வீதித் தடையை அமைதிப்படையினர் அகற்றும் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.