பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்காவால் விதிக்கப்படும் புதிய வரிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என கடுமையாக விமர்சித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகத் தலைவர்கள் மாநாட்டில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
பிராந்திய இறையாண்மையை எதிர்க்க வரிகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படும் போது அது கவலைக்கிடமானது என்றும் மக்ரோன் கூறினார்.
இதற்கு முன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை சொந்தமாக்கும் தனது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளுக்கு புதிய வரிகளை அறிவித்திருந்தார். ட்ரம்ப் கூறியதாவது, கிரீன்லாந்து தேசியமும் உலகளாவிய பாதுகாப்புக்கும் முக்கியம், எனவே அவரது திட்டத்திலிருந்து பின்வாங்க முடியாது என்பது.
மேலும், ட்ரம்ப் தனது சமூக ஊடகங்களில் மக்ரோனின் “நீங்கள் கிரீன்லாந்தில் என்ன செய்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை” என்ற கருத்தையும், நேட்டோ பொதுச் செயலாளரின் செய்தியையும், கிரீன்லாந்தில் அமெரிக்கக் கொடி பறக்கும் போல உருவாக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.