அமெரிக்காவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என்று ஈரானின் தேசியப் பாதுகாப்பு மன்றத் தலைவர் அலி லாரிஜானி (Ali Larijani) தெரிவித்துள்ளார். ஈரான் மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகிய தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்ற நிலையை உருவாக்கியிருப்பவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்றும் லாரிஜானி குற்றஞ்சாட்டினார்.
இதற்கு முன்பு, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும், பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை ஈரான் தரப்பிலிருந்தே முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின.
“ஈரான் இதற்கு முன்பே பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருக்க வேண்டும்” என்று டிரம்ப் கூறியதாக The Atlantic சஞ்சிகை செய்தி வெளியிட்டது. இந்த பின்னணியிலேயே, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமே இல்லை என்று லாரிஜானி தெளிவுபடுத்தியுள்ளார்.