சீனாவின் வூஹான் மாநிலத்தில் பரவிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒன்பதே நாட்களில் அங்கு அதிநவீன மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் படுக்கைகளுடன் 419 வார்டுகளுடன் கூடிய இந்த அதிநவீன மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. 30 அவசர சிகிச்சை பிரிவுகளும் இங்கு உள்ளன.
இன்று முதல் இந்த மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் என சீன அரசு அறிவித்துள்ளது. சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் அரும்பாடு பட்டு இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளனர்.
1,400 பணியாளர்களுடன் ஏராளமான மருத்துவர்களும் இந்த மருத்துவமனைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.