Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இம்ரான் கானுக்கு இடைக்காலப் பிணை

இம்ரான் கானுக்கு இடைக்காலப் பிணை

0 minutes read

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பதவியில் இருந்தபோது அவர் பெற்ற அரச அன்பளிப்புகளை விற்றதாகக் கூறப்படும் வழக்கில் அவருக்கு இடைக்காலப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பயங்கரவாதம், அரசியல்வாதியைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி மற்றும் ஊழல் ஆகிய ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் இம்ரான் கானைக் கைதுசெய்ய முடியாது என பாகிஸ்தானின் 3 நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளன.

இம்ரான் கான், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போதில் இருந்து அவர் பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃபை (Shehbaz Sharif) பதவியிலிருந்து நீக்க முற்கூட்டியே தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகின்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More